நின்று கொண்டிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன்கள் திருநாவுக்கரசு(42) மற்றும் சுப்புராஜ்(37). இவர்கள் இருவரும் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தனர். நேற்று மாலையில் தூத்துக்குடியிலிருந்து மரதடிகளை லாரியில் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தனர். லாரியை திருநாவுக்கரசு ஓட்டியுள்ளார். அவர் தூக்கம் வருவதாக கூறியதால் சுப்புராஜ் லாரியை ஓட்ட ஆரம்பித்துள்ளார். அதிகாலையில் சீதபற்பநல்லூர் அருகே சென்றபோது […]
