உடுமலை தாலுகாவில் பட்டா மாறுதலுக்காக 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகில் செஞ்சேரிபுத்தூரில் வசித்து வருபவர் வேலுச்சாமி(37). இவர் உடுமலை தாலுகா தொட்டம்பட்டி வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பொள்ளாச்சி அருகில் ஊஞ்சவேலாம்பட்டடியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் தொட்டம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டியில் ஒரு தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினார். இந்த தோட்டத்திற்கு பட்டா பெயர் மாற்றுவது தொடர்பாக ஜெயராமன் தொட்டம்பட்டி […]
