முன்னாள் சார்பதிவாளருக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடும்ப தான தொகையை பெறுவதற்கான பத்திரத்தை வாங்குவதற்கு நாயக்கர்பாளையம் பகுதியை சேர்ந்த நீலமேகம் -கொளஞ்சி தம்பதியினர் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த தம்பதியினர் பத்திரத்தை வாங்குவதற்காக கடந்த நவம்பர் 4 ,2015 அன்று சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் சார்பதிவாளர் சுபேதார்கான் 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். இதைப்பார்த்த லஞ்ச ஒழிப்பு […]
