லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள செம்பலகவுண்டம் பாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் மீது வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் செல்வக்குமார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் […]
