மக்கள் தங்கள் வீடுகளிலேயே கஞ்சா வளர்க்கலாம் என்று லக்சம்பர்க் அரசு அறிவித்துள்ளது. பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் போதை மருந்துகளில் சில அடிப்படை மாற்றங்களை லக்சம்பர்க் நாடு கொண்டு வந்துள்ளது. இனிமேல் ஒரு குடும்பத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேலானவர்கள் இருந்தால் அதிகபட்சமாக நான்கு கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதி வழங்கியுள்ளது. இதனை நேற்று முன்தினம் லக்சம்பர்க் அரசு அறிவித்துள்ளது. மேலும் மக்கள் வீட்டின் உட்புறத்தில், வெளியில், மொட்டை மாடியில், பால்கனியில் என்று தங்களது எல்லைக்குள் மட்டும் வளர்க்க […]
