தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய குறைத்தீர் முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கு தமிழக முழுவதும் அனைத்து வட்டங்களிலும் குறைத்தீர் முகாம் நடத்தப்பட உள்ளது.அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர குறைத்தீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் செப்டம்பர் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை […]
