தரமான அரிசி வழங்காததால் பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிபாக்கம் பஜார் தெருவில் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடை செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து செங்கட்டான் தெரு, கோட்டைத் தெரு, கவரைத் தெரு, ஒச்சேரி அம்மன் கோவில் தெருக்களில் 460 குடும்ப அட்டை தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி வழங்கப்பட்டதால் விற்பனையாளர்களிடம் பொதுமக்கள் […]
