ரேஷன் அரிசியை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம்-செந்துறை பிரிவு சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். இதனை பார்த்ததும் சரக்கு வேனில் வந்த இரண்டு பேர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். அதில் ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பதும், தப்பி ஓடியது […]
