குழந்தை ஒன்று குப்பைத்தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள ரெகன்ஸ்பர்க் என்ற நகரில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பச்சிளம் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இது குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது குழந்தையின் தாயை கைது செய்துள்ளதாகவும் அவரை தற்போது காவலில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் இதனை கொலைக்கான வழக்காக பதிவு செய்து அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]
