கூலி தொழிலாளியின் வீட்டிற்கு 95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு வந்த குறுந்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்குத்திபுரம் தொட்டி பகுதியில் ரேவண்ணா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் சிமெண்ட் ஓடு வீட்டின் மின் இணைப்பு காளி பெயரில் இருக்கிறது. இந்நிலையில் ரேவண்ணா தனது வீட்டிற்கு 40 முதல் 50 யூனிட் வரைய மின்சாரம் பயன்படுத்தி […]
