காரைக்குடியில் வாகன சோதனையின் போது 32 மது பாட்டில்கள் மற்றும் ரூ.83 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பரிசு பொருள்கள், கணக்கில் வராத பணம், மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காரைக்குடி பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பறக்கும் படை […]
