மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவருக்கு இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய கடற்படையினரால் சுட்டப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், இந்திய கடற்படையினரால் தமிழக மீனவர் சுடப்பட்ட செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த சம்பவத்தில் […]
