அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் மாணவியரின் விவரங்களை வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6- 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்ற […]
