சென்னை ஆர்.எஸ்.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, மயிலாப்பூர் ஆர்.எஸ். புரம் கோவிந்தசாமி நகரில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டது. கடந்த 29ஆம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]
