நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வேதாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள பிரபல கார் விற்பனை நிறுவனத்திடம் புதிய காருக்கு ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்தார். அதுமட்டுமில்லாமல் தனது பழைய காரை விற்று தர கொடுத்துள்ளார். அந்த பழைய காருக்கு ரூ. 65 ஆயிரம் தருவதாக கார் நிறுவன ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் பல நாட்கள் ஆகியும் புதிய கார் வழங்கப்படவில்லை. மேலும் பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனையடுத்து உடனடியாக வேதாச்சலம் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். […]
