டோக்கியோ பாராஒலிம்பிக்கில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் தோல்வியை தழுவினார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் . இதையடுத்து நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா 128.5 […]
