பேருந்தில் மாணவர்கள் ரூட் தல என்ற பெயரில் அட்டகாசம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து சென்னையில் வரும் திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் “ரூட்டு தல” என்ற பெயரில் பஸ்ஸில் ஏறி கொண்டு மாணவர்கள் அட்டகாசம் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். […]
