நீட்தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு சென்ற 2020-ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தது. இப்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டுமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி விரிவான புள்ளி விபரங்களை தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த ரிட்மனுவை உச்சநீதிமன்றம் நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு சமீபத்தில் விசாரித்தது. இந்நிலையில், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள […]
