ரிக் வண்டியில் இருந்த இரும்பு குழாய் எதிர்பாராத விதமாக தச்சு தொழிலாளி மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் உள்ள புதுபள்ளிபாளையம் ஆறுமுகம் லைனின் சக்கரபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். தச்சு தொழிலாளியான இவருக்கு சாணார்பாளையம் வேளாங்காட்டார் நகரில் சொந்தமாக இடம் உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் தற்போது வீடு கட்டும் பணிகள் தொடங்கி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது ரிக் வண்டி திடீரென […]
