பிரபல நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் உள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் திடீரென அதிகாலை 3 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
