Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்….!! ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு…!!

தெற்கு போஸ்னியாவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் லுபின்ஜே நகரத்திற்கு வடகிழக்கே 14 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதப்படும் பகுதியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெல்கிரேட், ஜாக்ரெப் மற்றும் ஸ்கோப்ஜே வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்பேனியா மற்றும் தெற்கு இத்தாலியிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

குலுங்கிய கட்டிடங்கள்…. பீதியில் மக்கள்…. தகவல் தெரிவித்த சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம்….!!!

தைவானில் திடிரென நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று  காலை 12.43 மணியளவில் உணரப்பட்டது. மேலும் இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகயுள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கட்டிடங்கள் […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில்” ஏற்பட்ட அதிபயங்கர தாக்கம்…. என்னன்னு நீங்களே பாருங்க..!!

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் தெற்கே உள்ள குவாலேகாஜி என்ற பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி இருந்ததாகவும் நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நிலநடுக்க பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக சம்பவ இடத்திற்கு ஆய்வுக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

JUSTIN : ஜப்பான் – ஹோன்சு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு…!!!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது ஜப்பானின் வடகிழக்கு பகுதியானஹோன்சு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியின் புறநகர் பகுதிகளில் 2 மாதங்களில் 14 நில அதிர்வுகள் – நடுங்கும் தலைநகர்!

டெல்லியின் புறநகர் பகுதிகளில் 2 மாதங்களில் 14 நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த 14 அதிர்வுகளில் 2 மட்டும் தான் ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளுக்கும் மேல் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பள்ளத்தாக்கு மற்றும் பிளவுகளில் ஏற்படுகின்றன என நில அதிர்வு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு டெல்லி இமயமலை தொடரில் வரும் நிலையில் இந்திய தட்டு, யுரேஷிய தட்டுகளுக்கு கீழ் வருவதால் நில அதிர்வு இந்த பகுதியில் அதிகம் என புவியியல் வல்லுநர்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த சிறு […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் இன்று லேசான நிலஅதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு!

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சம்பா பிராந்தியத்தில் லேசான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் இன்று மதியம் 12:17 மணியளவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பாவின் பிராந்திய எல்லையில் தர்மஷாலாவிலிருந்து மேற்கு மற்றும் வடமேற்கில் 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மதியம் 12:17 மணிக்கு ஏற்பட்டது எனவும் தகவல்கள் வெளியகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 19 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. மேலும், காங்க்ரா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த நிலஅதிர்வு […]

Categories

Tech |