நியூசிலாந்தில் இருக்கும் கெர்மடெக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் இருக்கும் கெர்மடெக் தீவுகளில் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டது. தெற்கு பசிபிக் கடலில் இருக்கும் இத்தீவில் உண்டான நிலநடுக்கம், சுமார் 6.4 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருக்கிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்திற்கு பின், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
