நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவருடைய பேரன் துஷ்யந்த் ஆகியோர் மீது காசோலை மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவருக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றம் பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் கவனித்து வரும் நிர்வாகம் ஒன்று மயிலாப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ளது. இதனையடுத்து துஷ்யந்த் வழங்கிய 15 லட்சம் மதிப்பிலான 2 காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது. […]
