புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் பல முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை விட புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நாள் அன்று திதி செய்து வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் என கூறப்படுகின்றது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கோவிலில் இன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கூட்டம் வரும். இதனால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. […]
