பள்ளியின் ஓட்டுக்கூரையில் இருந்து மரக்கட்டை கீழே விழுந்ததில் 3 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள எஸ்.வாகைக்குளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 45 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் 2 கட்டிடங்கள் உள்ள நிலையில் அதில் ஒரு கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை இடிப்பதற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எஸ்.வாகைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால் […]
