Categories
தேசிய செய்திகள்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. வீரர்களின் கதி என்ன…? வெளியான தகவல்…!!!!

அருணாச்சல பிரதேச மாநிலம் சியாங் பகுதியில் ராணுவ தலைமையகத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வழக்கம்போல் ரோந்து பணிக்கு சென்றுள்ளது. மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அப்பர் சியாங் மாவட்டம் டுட்டிங் தலைமையகத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில் எத்தனை வீரர்கள் சென்றனர்? அவர்கள் கதி என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மோசமான வானிலை…. விபத்திற்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்…. 6 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டை பலுசிஸ்தான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர். பலுசிஸ்தானில் ஹர்னி நகரிலுள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 தளபதிகள் உட்பட 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் ராணுவம் எந்த தகவலும் வெளியிடபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |