காஞ்சிபுரத்தில் கணவன்-மனைவி தகராறில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் பேட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒடிசாவில் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி நதியா. இவர்களுக்கு சோம்நாத், ஜெகத்ரட்சகன் என்ற மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் சென்ற 15 நாட்களுக்கு முன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]
