சியாச்சின் பனிமலைப் பகுதியில் காணாமல்போன இராணுவ வீரரின் சடலம் 38 வருடங்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தைச் சோ்ந்த சந்திர சேகா் ஹா்போலா கடந்த 1984ம் வருடம் இமயமலையில் உள்ள உலகின் உயரமான யுத்தகளமான சியாச்சின் பனிமலைப் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட சென்றாா். அப்போது இவரையும் சோ்த்து மொத்தம் 20 வீரா்கள் கொண்ட குழு சண்டையிட சென்றது. இந்நிலையில் ஏற்பட்ட பனிப் புயலில் சிக்கி 20 பேரும் இறந்தனர். இவா்களில் 15 பேரின் […]
