ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வைலம்பாடி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகலாந்து பகுதியில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி விடுமுறையில் வினோத்குமார் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் காளிகாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வினோத்குமார் உறவினரான வெங்கடேசன் என்பவர் வீட்டிற்கு […]
