85 பேரை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும் போது திடீரென்று விபத்துக்குள்ளான சம்பவம் பயங்கரவாத தாக்குதலால் ஏற்படவில்லை என்று பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஜோலா தீவிலிருந்து சி-130 என்னும் ராணுவ விமானம் சுமார் 85 ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து இந்த ராணுவ விமானம் தரையிறங்கும் போது திடீரென்று விபத்துக்குள்ளானது என்று அந்நாட்டின் ராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 15 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும், […]
