வடக்கில் இராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் 7 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், பர்தார்பூரில் உள்ள தற்காலிக முகாமில் இருந்து எல்லை பாதுகாப்பு பணிக்கு 26 வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் காலை 9 மணியளவில் தோய்ஸ் பகுதியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது சாலையிலிருந்து தடுமாறி […]
