பிரான்சில் ராணுவ ஆட்சி அமைப்போம் என முன்னாள் ராணுவ அதிகாரி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் அரசியல் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பெரும் பகுதிகளை பிரித்து இஸ்லாமியவாதிகள் தங்கள் பகுதியாக மாற்றி பிரான்ஸை சிதைப்பதாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் பிரான்சில் உள்நாட்டுப் போர் ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ராணுவத்தின் முன்னாள் அதிகாரி Jean-Pierre Fabre-Bernadac அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் […]
