பணியில் இருந்த போது ராணுவ அதிகாரி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் மறவன்குளம் மாரியம்மன் நகர் பகுதியில் மதன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவ அதிகாரியாக அசாமில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் இருந்த போது திடீரென மதன் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து மதனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று மாலை 4 மணியளவில் சொந்த ஊருக்கு வந்த மதனின் உடலை […]
