ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஓராண்டில் இல்லாத அளவுக்கு குயின்ஸ்லாந்தில் தொற்று பாதிப்பு 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
