தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து, முதல்வர் ஸ்டாலின் நான்கு நாட்களாக ஆய்வு செய்து வந்தார். அதில் வட சென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் வடியாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். […]
