சுப்பிரமணியபுரம், நாடோடிகள் போன்ற படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சசிகுமார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ராஜவம்சம். நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் 49 நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் விழாவில் பேசிய சசிகுமார், நடிகர் ரஜினி தனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்ததாக கூறினார். அதாவது படத்தயாரிப்பில் ஈடுபட வேண்டாம் என்றும் அது மிகவும் சிரமமானது என்றும் நடிகர் ரஜினி தன்னிடம் கூறியதாக சசிகுமார் தெரிவித்தார்.
