உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா நேற்று அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே உரையாற்றினார். இந்நிலையில் அவர் பேசியதாவது “துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வராமல் பயங்கரவாதம் தொடர்கிறது. இப்போரில் கொல்லப்பட்டவர்கள், கை-கால்களை இழந்தவர்கள், இன்னும் உயிருடன் இருப்பவர்கள், போர் நடைபெறும் முன்களப் பகுதியிலிருந்து தங்களது குடும்பத்தினர் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். இதனிடையில் நான் கேட்க விரும்பாத ஒன்றைக் கேட்கிறேன். அதாவது ஆயுதங்களைக் கேட்கிறேன். ஏவுகணை தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வான் […]
