உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு திரு ராகுல் காந்தி, திருமதி பிரியங்க காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிர் இழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர சம்பவம் […]
