விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ராகவன் பேட்டை பகுதிகளில் எந்த ஒரு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டு ராகவன் பேட்டை பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக பஞ்சாயத்து சார்பாக ஏற்படுத்தப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி தான் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது என்றும் நகராட்சி ஆக மாற்றப்பட்டு 10 ஆண்டுகளாகியும் குடிநீருக்காக மாற்று ஏற்பாட்டிற்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் […]
