ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் பல நாடுகளில் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. ஏனெனில் உக்ரைனுக்கு சொந்தமான கருங்கடல் துறைமுகத்திலிருந்து தான் 15 சதவீதம் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படும். இந்த துறைமுகத்தை போரின்போது ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்ததால் தானிய ஏற்றுமதியானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கருங்கடல் துறைமுகத்திலிருந்து ரஷ்யா தானியங்களை கடத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் பலமுறை குற்றம் சுமத்தினர். இது தொடர்பாக துருக்கி அதிகாரிகள் […]
