Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம்….15 ஆயிரம் கோடீஸ்வரர்கள் வெளியேறும் முயற்சி…. இங்கிலாந்து அமைச்சகத்தின் தகவல்…!!

ரஷ்யாவிலிருந்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என இங்கிலாந்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய ராணுவ படை வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய குடிமக்களுக்கு  விசா அறிமுகம்…. உக்ரைன் அரசின் அதிரடி முடிவு….!!

ரஷ்ய கூட்டமைப்பின் குடிமக்களுக்கு  விசாக்களை அறிமுகம் செய்ய உக்ரைன் அரசு முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புதின் தலைமையிலான  ரஷ்ய ராணுவ படைகள் மேற்கொண்டு வரும்  போரானது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரு தரப்பிலும், பாதிப்புகள் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இரு நாடுகளும் முனைப்பு காட்டவில்லை. இரு நாட்டை சேர்ந்த வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளார்கள். மேலும் லட்சக்கணக்கானோர்  உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளார்கள். இந்நிலையில், உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

முற்றுகையிட்ட ரஷ்யப்படையினர்…. உக்ரைன் இராணுவ தளபதி சிறைபிடிப்பு….!!!

உக்ரேனில் தாக்குதல் மேற்கொண்டு வரும் ரஷ்ய படையினர் என்னும் நகரின் ராணுவ தளபதியை சிறைப் வைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் செவெரோடோனெட்க் என்னும் நகரத்தில் ரஷ்ய படையினர் தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்நகரை சேர்ந்த மக்கள் வெளியேற அமைக்கப்பட்டிருந்த தரை பாலங்கள் ரஷ்ய படையினரால் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும், செவெரோடோனெட்க் நகரை சேர்ந்த அனைத்து மக்களும் சரணடைந்து விட வேண்டுமென்று ரஷ்ய படைகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் செவெரோடோனெட்க் நகரத்தில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

“பிரித்தானியா ராணுவம்”… போருக்கு ரெடியா இருங்க…. முதன்மை தளபதியின் கோரிக்கை….!!!!!

சாத்தியமான 3-ஆம் உலகப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடத் தயாராகுபடி ராணுவவீரர் ஒவ்வொருவருக்கும் பிரித்தானிய முதன்மை தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் கொலை வெறித்தாக்குதல் உலகளாவிய பாதுகாப்பின் அடித்தளத்தை உலுக்கி இருப்பதாக பிரித்தானியாவின் புது ராணுவத் தளபதி ஜெனரல் சர்பேட்ரிக் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் போரில் ரஷ்யாவை வெல்லக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்குவதாகவும் அவர் சபதம் செய்து உள்ளார். அத்துடன் துணிச்சல் மிகுந்த பிரித்தானிய துருப்புகள் ஐரோப்பாவில் மீண்டுமாக போரிடத் தயாராக வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் போர்…. உக்ரைனுக்கு ஹார்பூன் ரக ஏவுகணைகளை கொடுக்கும் அமெரிக்கா….!!!

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஹார்பூன் வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைன் நாட்டிற்கு அளிக்க தீர்மானித்திருக்கிறது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது 115-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் அமெரிக்கா, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. எனவே, அந்நாட்டிற்கு அமெரிக்கா ஆயுத உதவிகளும் செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சேர்ந்து உக்ரைன் நாட்டின் படைகளுக்கு வலிமை சேர்க்க கூடிய வகையில் ஹார்பூன் வகை கப்பல் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது…. மீண்டும் அங்கு செல்வேன்… -அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருப்பதாக கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. எனினும், அமெரிக்கா எதிர்த்தும் அதனை கண்டுகொள்ளாமல் இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து தான் கச்சா எண்ணையை வாங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளரான நெட் பிரைஸ் தெரிவித்ததாவது, […]

Categories
உலக செய்திகள்

“போதைப்பொருள் கடத்தல் வழக்கு” பிரபல மாடல் அழகி கைது…. 20 ஆண்டுகள் சிறை தண்டனை….?

போதைப் பொருள் கடத்தியதாக ரஷியாவின் பிரபல மாடல் அழகி கிறிஸ்டினா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.  ரஷியா  நாட்டின் பிரபல மாடல் அழகி   கிறிஸ்டினா துகினா. 34 வயதான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் துபாய் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் கிராண்ட் பிரிக்ஸ் மிஸ் பெடரேஷன் அழகி பட்டத்தையும் வென்றுள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற அழகுப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளார். இந்நிலையில் மாடல் […]

Categories
உலக செய்திகள்

கணவர்களின் நிலை என்ன…? ரஷ்ய இராணுவ வீரர்களின் மனைவிகள் ஆர்ப்பாட்டம்…!!!

உக்ரேன் நாட்டினுடைய டான்பாஸ் நகரத்தில் போரிடும் ரஷ்ய வீரர்களின் மனைவிகள் தங்கள் கணவர்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் குதித்திருக்கிறார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்கள் கடந்து தீவிரமாக போர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் டான்பாஸ் நகரை ஆக்கிரமிப்பதற்காக ரஷ்யா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்நகரில் நடந்த போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். எனவே, அவர்களின் மனைவிகள் தற்போது போராட்டம் நடத்துகிறார்கள். இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 2 வருடத்திற்கு உலக வரைபடத்தில் உக்ரைன் இருக்குமா?…. ரஷ்யாவின் முன்னாள் அதிபர் கருத்து…!!!

ரஷ்ய நாட்டினுடைய முன்னாள் அதிபர் இன்னும் இரண்டே வருடங்களில் உக்ரைன் நாடு உலக வரைபடத்தில் காணாமல் போகலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். எனினும் ரஷ்யப் படைகள் டான்பாஸ் நகரை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், பதில் தாக்குதல் நடத்த உக்ரைன் திணறிக்கொண்டிருக்கிறது. எனவே அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுத உதவிகள் செய்து கொண்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி…. உக்ரைனை ஏமாற்றிய பிரான்ஸ்…. வெளியான தகவலால் அதிர்ச்சி….!!

ரஷியாவிடமிருந்து பிரான்ஸ் குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.  உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பிரான்ஸ், ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷியாவையே நம்பி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யபடையினர் மிருகத்தனமானவர்கள்…. உக்ரைன் போர் குறித்து போப் பிரான்சிஸ் கருத்து…!!!

போப் பிரான்சிஸ், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல் மிருகத் தனமானது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாடு ரஷ்ய போரால் கடும் விளைவுகள் மற்றும் இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அங்கு ஆயுத தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பதில் தாக்குதல் நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுத உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 வீரர்கள் உயிரிழந்து கொண்டிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி மூத்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால் ரஷ்யா பெற்ற லாபம்…. கச்சா எண்ணெய் மூலம் எவ்வளவு கிடைத்தது தெரியுமா…?

உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிற்கு, கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 99 பில்லியன் அமெரிக்க டாலர்களை கிடைத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 110-ஆம் நாளாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதில் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் 40 சதவீத எரிவாயு தேவையையும், 27 சதவீத கச்சா எண்ணெய் தேவையையும் ரஷ்ய நாட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொண்டிருந்தன. ஆனால் போருக்குப்பின் ரஷ்ய நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

உலகில் மொத்தம் 12,705 அணு ஆயுதங்கள்…. 10 வருடங்களில் மேலும் உயரும்… நிபுணர்கள் தகவல்…!!!

உலக நாடுகளில் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையானது இன்னும் 10 வருடங்களில் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஸ்வீடனில் இருக்கும் ஸ்டாக்ஹோம் என்னும் அமைதி ஆய்வு நிறுவனமானது பல நாடுகளில் இருக்கும் அணு ஆயுத எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை உலக அரங்கை அதிர செய்திருக்கிறது. 35 வருடங்களாக அணு ஆயுத உற்பத்தி குறைவாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக மீண்டும் அணு ஆயுதங்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு வழங்கப்பட்ட 15000 இணையதள கருவிகள்… எலான் மஸ்க் அனுப்பினார்….!!!

உக்ரைன் நாட்டின் ராணுவத்திற்கு எலான் மஸ்க் மேலும் 15,000 இணையதள கருவிகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரேன் நாட்டின் மீது 100 நாட்களை கடந்து தீவிரமாக போர்தொடுத்து கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் நிதி உதவிகளும் ஆயுத உதவிகளும் செய்து கொண்டிருக்கின்றன. இதேபோன்று எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலமாக இணைய சேவைகளை செயற்கைக்கோள் வழியே அந்நாட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது உக்ரைன் நாட்டின் ராணுவம் பயன்படுத்துவதற்காக ஸ்டார்லிங்க்  […]

Categories
உலக செய்திகள்

எல்லாம் வெறும் நடிப்புதானா….? ரஷ்யாவில் புதிய பெயரில் உருவெடுத்துள்ள மெக்டொனால்ட்ஸ் நிறுவனம்….!!

ரஷ்யாவில் வுகூஸ்னோ ஐ டோச்கா என்று புதிய பெயரில் தொடங்கிய மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள். உக்ரைன் மீது ரஷ்யா  போர்  தொடுத்துள்ளதை கண்டித்து மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் நாட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ரஷ்யாவை விட்டு வெளியேறிய  பிறகும் அதன் உணவகங்கள் வுகூஸ்னோ ஐ டோச்கா என்ற புதிய பெயரில் இன்று முதல் இயங்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் மெக்டொனாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டவர் தான்  அலெக்சாண்டர் கோவர். இவர்தான் தலைநகர் மாஸ்கோவில் புதிய பெயரில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. தொடர்ந்து நீடிக்கும் போர்…. அதிகரிக்கும் குழந்தைகளின் பலி எண்ணிக்கை….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் அதிகரிக்கும் 287 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியை கைப்பற்ற ரஷ்ய ராணுவ படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதனை அடுத்து ரஷ்ய இராணுவத்தினரின் தாக்குதலில் 287 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.  மேலும்  492-க்கும் அதிகமான குழந்தைகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்…. ரஷ்யாவின் அதிரடி தாக்குதல்…. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!

உக்ரைன் நாட்டிலிருக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த செவரோ டொனெட்ஸ்க் நகரிலுள்ள ரசாயன ஆலை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். உக்ரேன் நாட்டின் மீது அதீத பலம் பொருந்திய ரஷ்யா போரிட்டு வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யாவின வசம் உக்ரைன் நாட்டின் பெரும்பகுதி சென்றுள்ளது. அதன்படி உக்ரேன் நாட்டிலுள்ள செவரோ டொனெட்ஸ்க் நகரின் பெரும் பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் செவரோ டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ரசாயன ஆலை மீது கடந்த […]

Categories
உலக செய்திகள்

சீனா-ரஷ்யா இடையே புதிய பாலம் திறப்பு…. இரு தரப்பு வர்த்தக உறவை மேம்படுத்த முயற்சி…!!!

சீனா-ரஷ்யா நாடுகளுக்கிடையே வர்த்தக உறவை மேம்படுத்த ஒரு பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. சீனா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையே இருக்கும் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2014ம் வருடத்தில் ஆமூர் என்னும் நதிக்கு நடுவில் பாலம் கட்டப்படுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, ரஷ்ய நாட்டின் பிலகோவேஷிசேன்ஸ்க் என்னும் நகரத்தையும் சீன நாட்டின் ஹெய்ஹீ என்னும் நகரத்தையும் சேர்க்கக் கூடிய வகையில் 2.2 கிலோ மீட்டர் நீளத்தில் […]

Categories
உலக செய்திகள்

மரியுபோல் நகரில் ரஷ்யப்படைகள் தாக்குதல்… 24 குழந்தைகள் உயிரிழப்பு…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 100 நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மரியுபோல் நகரத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றி விட்டனர். அப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் குழந்தைகள் 24 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, ரஷ்யப் […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்பான குடிநீர் இல்லை…. மரியுபோல் நகரில் காலரா ஏற்படக்கூடிய அபாயம்…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் சுகாதாரமான குடிநீர் இல்லாததால் மக்களுக்கு காலரா பரவக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில், ரஷ்யா 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் மரியுபோல் என்னும் துறைமுக நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அந்த மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, அங்கு காலரா நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யப் […]

Categories
உலக செய்திகள்

உணவு, விவசாய இலக்குகளை அழித்த ரஷ்யா…. உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரேன் நாட்டில் இருக்கும் உணவு விவசாய இலக்குகளை ரஷ்யா அழித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக உக்ரைன் நாட்டில் இருக்கும் உணவு மற்றும் விவசாய இலக்குகளை ரஷ்யா அழித்துக் கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் நெறிப்படி மீண்டும் கருங்கடலை திறக்கக்கூடிய ஒப்பந்தங்களை செய்ய இவ்வாறு செய்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் அதிகாரிகள், தங்கள் நாட்டின் விவசாய பொருட்களுக்கான முனையங்கள் ரஷ்யப் படைகள் தாக்கி அழித்ததாக கூறியிருக்கிறார்கள். உலக அளவில் உணவு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய நாட்டின் கல்லூரிகளுக்கு தடை…. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ரஷ்ய நாட்டின் 236 கல்லூரிகள், பல்கலைகழகங்கள், 261 கல்லூரி தலைவர்கள் மீது தடை விதிக்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது 107 வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்களும் ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளனர். மேலும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய நாட்டின் 236 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் 261 கல்லூரி தலைவர்கள் மீது தடை அறிவிக்கப்படுவதாக கூறியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் இங்கிருந்து வெளியேறுகிறோம்”…. ஐபிஎம்-ன் அதிரடி முடிவால்…. ரஷ்யாவில் பரபரப்பு….!!

ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக ஐபிஎம் தெரிவித்துள்ளது.  அமெரிக்க நாட்டை சேர்ந்த கணினி நிறுவனமான ஐபிஎம் ரஷ்யாவில் தனது தொழிலை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரேனின் மீது தாக்குதலை கண்டித்து ரஷ்யாவின் மார்ச் மாதம் முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்தது. அதே சமயத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎம் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்ததாவது  “ரஷ்யாவின் செயல்பாட்டை முடித்துக் கொள்கிறோம். மேலும் இந்த போரால் நிலையற்ற சூழல் நீடிப்பதால் முடிவை எடுக்க […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா… கடுமையாக கண்டிக்கும் ரஷ்யா…!!!

உக்ரைனுக்கு ராணுவ உதவி அளித்ததற்காக அமெரிக்க நாட்டை ரஷ்யா கடுமையாக சாடியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதற்கிடையில் வியன்னாவில் நடந்த ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ரஷ்ய தரப்பு  தெரிவித்ததாவது, மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு அளிக்கும் ஆயுதங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

6.5 கிலோ மீட்டர் தூரத்தில் கண்ணி வெடிகள்…. அகற்றும் பணியில் ரஷ்ய வீரர்கள்….!!!!!!!!

தன்னாட்சி பெற்ற டொனஸ்க் பகுதியில் சுமார் 6.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ரிமோட் மூலமாக இயங்கக்கூடிய கண்ணிவெடியை அகற்றும் வாகனம் மூலமாக 10 டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள்  மற்றும் சாதாரண கண்ணிவெடிகள்  கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப்பட்டதாக  கூறப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டின் ஏற்றுமதியை நாங்கள் தடுக்கவில்லை…. விளாடிமிர் புடின் பேச்சு…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானிய பொருட்களை நாங்கள் ஒருபோதும் தடுக்கவில்லை என்று விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் ஒரு தொலைக்காட்சியில் விளாடிமிர் புடின் ஒரு நேர்காணலில் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டில் நடக்கும் தானிய ஏற்றுமதியில் நாங்கள் எப்போதும் தலையிட்டதில்லை. அந்நாட்டில் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. உக்ரைன் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைமுகங்களின் வழியாக ஏற்றுமதி செய்யலாம். அந்நாட்டின் துறைமுகங்களில் இருக்கும் கண்ணிவெடியை நீக்கும் சமயத்தில் ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ளாது. இதனை […]

Categories
உலக செய்திகள்

“சரியான நேரத்திற்காக காத்திருக்கிறேன்”…. உக்ரைனுக்கு செல்ல இருக்கும் போப் பிரான்சிஸ்…. உலக தலைவர்களிடம் மீண்டும் கோரிக்கை….!!

உக்ரைன் நாட்டிற்கு செல்ல விரும்புவதாகவும், சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். உக்ரைன் ரஷிய இடையிலான போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரினால் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த போரை நிறுத்துவதற்காக சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. குறிப்பாக வாடிகன் தேவாலயத்தின் போப் பிரான்சிஸ், போரை முடிவுக்கு கொண்டு வர, […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. மகாத்மா காந்தியின் பொன்னான வார்த்தைகளை…. மேற்கோள் காட்டிய உக்ரைன் அதிபர்….!!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய போது  மகாத்மா காந்தி வார்த்தைகளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலினால் சின்னாபின்னமாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய போது மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். அதாவது “பலம் என்பது பயம் இல்லாத நிலையில் உள்ளது, நம் உடலில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய நாட்டை நாங்கள் எப்போதும் தாக்க மாட்டோம்…. அமெரிக்க நாட்டிடம் ஏவுகணை கோரும் உக்ரைன்…!!!

உக்ரைன் அரசு அதிக தொலைவிற்கு பாய்ந்து தாக்க கூடிய ஏவுகணைகளை அமெரிக்காவிடம் கோரியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய படையினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிக தொலைவிற்கு சென்று துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகளை தங்களுக்கு தந்து உதவ வேண்டும் என்று அமெரிக்காவிடம் உக்ரைன் தூதரான ஒக்ஸானா மார்க்கரோவா கோரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் அவர் தெரிவித்ததாவது, எங்கள் நாட்டை காப்பதற்கு இது போன்ற ஆயுதங்கள் தேவைப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

இத்தனை லட்சம் பேரா….? அகதிகளாக வெளியேறிய மக்கள்…. தகவல் வெளியிட்ட ஐ.நா….!!

உக்ரைனிலிருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் போலந்து நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர். குறிப்பாக போலந்து நாட்டில் மட்டும் 36 லட்சம் பேர் அகதிகளாக குடியேறியுள்ளதாக  ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகளின் பிரச்சனை, உலக பிரச்சனை இல்லை… அந்த மனநிலையில் இருக்காதீர்கள்… -ஜெய்ஷங்கர்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கான பிரச்சனையை உலக பிரச்சனைகளாக நினைக்கும் மனநிலையை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியிருக்கிறார். ஸ்லோவேகியா என்னும் ஐரோப்பிய நாட்டின் தலைநகரான பிரஸ்லாவாவில், நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரிடம், உக்ரைன்-ரஷ்ய போரில் இந்தியா யார் பக்கம்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் தெரிவித்ததாவது, இந்தியா மீது இவ்வாறான கட்டமைப்பை திணிப்பதற்கு முயற்சி நடக்கிறது. இந்தியா, யார் பக்கமும் சாய தேவையில்லை என்று […]

Categories
உலக செய்திகள்

20 சதவீத பகுதியை இழந்துள்ளோம்…. அதிரடியில் ரஷ்யப் படைகள்…. வேதனையில் உக்ரைன் அதிபர்….!!

உக்ரைன் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை ரஷிய தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உக்ரைன் அதிபர் இன்று தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இங்கு ரஷியாவை ஒட்டியிருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாட்டின் லக்சம்பர்க்கில் நடைபெற்ற சட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உக்ரைன் அதிபர்  ஜெலென்ஸ்கி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “உக்ரைனின் 20 சதவீத நிலபரப்பை ரஷியவின் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா – உக்ரைன் போரின் 100வது நாள்”….. உக்ரைனின் 20% நிலத்தை கைப்பற்றிய ரஷ்யா…. இப்பதைக்கு இது முடியாது….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இன்று ரஷ்யா மீது உக்ரைனை நடத்தி வரும் தாக்குதலின்  100 வது நாள் ஆகும். இந்த தொடர் தாக்குதலில் உக்ரைன் நாட்டின் 20% பகுதி ரஷிய அரசின் வசம் சென்று விட்டதாக உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டமைப்பில் சேருவதை தடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது. இதில் உக்ரைன் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் கொடூரம்…. உக்ரைனில் சேதப்படுத்தப்பட்ட 1000 பள்ளிகள்….!!!

உக்ரேன் நாட்டில் இருக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படைகள் உக்ரேன் நாட்டின் மீது மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் நாட்டில் இருக்கும் மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிக்கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மக்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தும் நோக்கத்தோடு தாக்குதல் மேற்கொள்வது போர்குற்றம். எனினும், கட்டிடங்களை காட்டிலும் பள்ளிக்கூடங்கள் நூற்றுக்கணக்கில் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். செர்னிஹிவ் என்னும் நகரத்தில் இருக்கும் 35 பள்ளிகளில் 7 […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் சில பகுதிகளை கொடுத்தாலும்…. போர் முடிவடையாது… -ஒலேனா ஜெலென்ஸ்கா…!!!

உக்ரைன் அதிபரின் மனைவியான ஒலேனா ஜெலென்ஸ்கா, தங்கள் நாட்டினுடைய சில பகுதிகளை ரஷ்யாவிற்கு கொடுத்தாலும் போர் நிறைவடையாது என்று தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவியான ஒலேனா ஜெலென்ஸ்கா தெரிவித்ததாவது, சில நேரங்களில் செல்வாக்கு மிகுந்த நாடுகளை சேர்ந்த தலைவர்கள்  வெளியிடும் அறிக்கைகள் அனைத்தையும் உக்ரைன் மக்கள் எளிதாக எடுத்து விட முடியாது. எங்கள் நாட்டின் சில பகுதிகளை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது. அது சுதந்திரத்தை விட்டுக் தருவது போல ஆகிவிடும். ரஷ்யப்படையினர், டான்பாஸ் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

“15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கலாம்”….. புதின் எதிர்ப்பாளர் மீது கிரிமினல் வழக்கு….!!!!!!!

அலெக்ஸி நவால்னி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் விமர்சனகாரரான எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி  நவால்னி மீது 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தீவிரவாத அமைப்பை உருவாக்கி அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட முயற்சி செய்ததாக நவால்னி  மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நாவால்னி  இந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால் குறைந்த இந்திய பொருளாதார வளர்ச்சி… வெளியான புள்ளி விபரம்…!!!

உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரால் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 4.1% குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்திய நாட்டின் பொருளாதாரமானது நான்காம் காலாண்டில் குறைவான வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தியானது 4.1% தான் வளர்ச்சியடைந்திருக்கிறது. பொருளாதாரம் மீண்டு வருவதற்கு பணவீக்கம் மிகப்பெரும் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்காக போரிட்டரா…. ஹீரோவாக போற்றப்படும்…. பிரிட்டன் எம்.பி-யின் மகன்….!!

பிரிட்டன் எம்.பி.யின் மகன் உக்ரைனின் பக்கம் போரிட்டதற்காக பிரிட்டிஷ் ஊடகங்களில் ஹீரோவாகப் போற்றப்படுகிறார்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் ரஷிய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மந்திரி ஹெலன் கிராண்டின் மகனான பென் கிராண்ட் மீது கிரிமினல் வழக்கைத் தொடங்கியுள்ளதாக ரஷிய நீதித்துறை தெரிவித்துள்ளது. இங்கு கூலிப்படை மீதான குற்றவியல் வழக்கின் கட்டமைப்பிற்குள், பிரிட்டனை சேர்ந்த பென் கிராண்ட் உக்ரைனுக்காக ஆற்றிய பங்கை ரஷிய விசாரணையாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உக்ரைனுக்கு ராக்கெட் விற்க மாட்டோம்…. ஜோ பைடன் மறுப்பு…!!!

ரஷ்ய நாடு வரை பாய்ந்து தாக்கக்கூடிய திறனுடைய ராக்கெட்டுகளை உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா விற்பனை செய்யாது என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்களைத் தாண்டி தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் தலைநகரை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. தற்போது, அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்ற தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவை எதிர்த்து நடக்கும் போரில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

புடின் இன்னும் 3 வருடங்கள் தான் உயிர் வாழ்வார்…. கசிந்த உளவுத்துறை தகவலால் பரபரப்பு…!!!

ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் குறித்த தகவல் ரகசிய உளவாளியிடமிருந்து வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு சேவையில் பணிபுரிந்த போரிஸ் கார்பிச்கோவ் என்ற நபர், தற்போது பிரிட்டன் நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ரஷ்ய நாட்டின் உளவாளி ஒருவரிடமிருந்து ரகசியமாக தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்படி, விளாடிமிர் புடினுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் கண்ணாடி அணிந்து கொள்வதை பலவீனமாக நினைப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. எனவே, தன்னைச் சுற்றி எப்போதும் சிலரை உடன் வைத்திருந்துள்ளார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் போர் பதற்றம்!…. ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எடுத்த அதிரடி முடிவு…..!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடித்து வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அது தோல்வியில் முடிந்தது. இதனிடையில் போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்காவும், ஐரோப்பியநாடுகளும் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துவரும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் ரஷ்யாவின் நிறுவனங்கள் தங்களது நாடுகளில் செயல்பட பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிகக்கொடிய விஷம் புடினிடம் இருக்கிறது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலகிலேயே அதிக ஆபத்து கொண்ட விஷம், ரஷ்ய நாட்டின் அதிபரான  விளாடிமிர் புடினிடன்  இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உலகில் விஷங்கள் பல்வேறு வகைகளில் இருக்கிறது. சில வகையான விஷங்கள் மெதுவாக கொல்லக்கூடியது. சில விஷங்கள் மரணத்தை விட கொடிய வலியை தரும். இது போன்ற, விஷம் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினிடம் இருக்கிறது. அவரது எதிரிகளுக்கு அவர் அதனை பயன்படுத்துகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. மிகவும் ஆபத்து நிறைந்த இந்த விசம் ஸ்ட்ரைக்னைன் என்பதாகும். இது தொடர்பில் நச்சு […]

Categories
உலக செய்திகள்

கிழக்கு உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா தீவிரம்… லுஹான்ஸ்க் மாகாணத்தில் கடும் தாக்குதல்…!!!

உக்ரைன் கிழக்குப் பகுதியை ஆக்ரமிப்பதற்காக லுஹான்ஸ்க் என்னும் பிராந்தியத்தில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. ரஷ்யா உக்ரேன் நாட்டின் மீது மூன்று மாதங்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. எனினும் அந்நாட்டின் தலைநகரான கீவ் மற்றும் கார்கீவ் நகரங்களை கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதிகளை ஆக்கிரமிக்க ரஷ்ய வீரர்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தேவைப்படும் பட்சத்தில் மேலும் அதிக வீரர்களை இணைக்க ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

போரில் காயமடைந்த ரஷ்ய வீரர்கள்…. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அதிபர் புடின்…!!!

உக்ரைனில் நடக்கும் போரில் காயமடைந்த ரஷ்ய வீரர்களை அதிபர் விளாடிமிர் புடின் நேரில் சந்தித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இதில், காயமடைந்த ரஷ்ய வீரர்கள் மாஸ்கோ நகரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிபர் விளாடிமிர் புடின் அந்த மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும் நாட்டிற்காக செய்த சேவைக்கு நன்றி கூறியிருக்கிறார்.

Categories
உலக செய்திகள்

“தடைகளை விளக்கினால் மட்டுமே இது சாத்தியம்”…. உக்ரேனிலிருந்து உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கு…. ரஷ்ய வைத்த அதிரடி செக்….!!

ரஷிய மீதான தடைகளை விலக்கினால் மட்டுமே உக்ரைனிலிருந்து உணவு பொருள்களை ஏற்றி செல்லும் கப்பல்களுக்கு மனிதாபிமான வழித்தடங்களை உருவாக்க தயாராக இருப்பதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.  நேட்டோ என்னும் பாதுகாப்பு அமைப்பில்  சேர விரும்பிய உக்ரைனுக்கு எதிராக ரஷிய கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதியிலிருந்து போரை தொடங்கியுள்ளது. குறிப்பாக கிழக்கு உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் டொனெட்ஸ்க் பகுதியில் சுவிட்லோடர்ஸ்க் என்ற நகரத்தை ரஷிய படைகள் நேற்று […]

Categories
உலக செய்திகள்

போர் குற்றவாளிக்கு…. வாழ்நாள் சிறை தண்டனை…. உக்ரைன் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு….!!

ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.  ரஷியா உக்ரைன் இடையேயான போரின் காரணமாக முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு இன்று  வழங்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தலைநகரான கீவ்வில் உள்ள நீதிபதிகள் குழு, போர்க்குற்றவாளி விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கியது. 21 வயதுடைய ரஷ்ய ராணுவ வீரரான ஒருவர் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தில், நிராயுதபாணியான உக்ரைன் நாட்டை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதற்காக கைதுசய்யப்பட்டுள்ளனர்.  உக்ரைனின் வடகிழக்கு சுமி […]

Categories
உலகசெய்திகள்

லைவ் அப்டேட்ஸ்…. அதிபரை கொல்ல முயற்சி…. உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்…!!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. சுமார் மூன்று மாதங்களாக இந்த போர் நீடித்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைன் போர் பற்றிய அண்மை செய்திகளைக் காண்போம். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளது. மூன்று மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடாக காட்சி அளித்து வருகிறது. மேலும் இந்த நகரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஈடுபாடுகளில் சிக்கிய 200 […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா அவர்களுக்கு போதாதா…? என் வீட்டை எதற்கு அழித்தார்கள்?…. வேதனையுடன் கேட்கும் உக்ரைன் மூதாட்டி…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 82 வயது மூதாட்டியின் குடியிருப்பு ரஷ்யா நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 4-ஆவது மாதமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தியதில் உக்ரைன் நாட்டின் பல குடியிருப்புகள் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு வசித்து வரும் மரியா மாயாஷ்லபக் என்ற 82 வயதுடைய மூதாட்டியின் குடியிருப்பு வெடிகுண்டு தாக்குதலில் தகர்க்கப்பட்டது. ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல், தன் வீட்டின் சமையலறையை தாக்கியதாக வருத்தத்துடன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய்…. இந்தியாவை பாராட்டும் இம்ரான் கான்…!!!

இந்தியா, ரஷ்ய நாட்டிடம் மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பாராட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா சமீப மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கப்பட்டதிலிருந்து பல நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிகமான அளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றன. இந்திய அரசும், மிக குறைவான விலையில் ரஷ்ய நாட்டிடம் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்கிறது. எனினும் இதனை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க அரசு எதிர்த்தும் […]

Categories
உலக செய்திகள்

பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை… எப்போது முடியும் போர்…? -உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் குறித்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டிருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் தெரிவித்தாவது,  உக்ரைன் நாடு ரத்தக்களறியாக இருக்கிறது. அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் குறித்த பேச்சுவார்த்தையில் தற்போது தடை ஏற்பட்டிருக்கிறது. எனினும் பேச்சுவார்த்தை மூலமாக போரை நிறுத்த முடியும். இந்தப் போரில் உக்ரைன் […]

Categories

Tech |