ரஷியா,மருத்துவ உபகரணங்களை இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷிய படைகள், உக்ரைன் நாட்டின் மீது 55-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு யுக்திகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் இப்போரினால் உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ரஷியா மற்றும் உக்ரைனில் இருந்தே கிடைக்கும் நிலையில், இப்போரின் தாக்கத்தால் அவற்றின் தயாரிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. […]
