கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் சிலர் ஆயுதங்களுடன் சண்டை போடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றார்கள். அங்கே 30 வயதுடைய இளைஞர் பிரைட் ஆல்வின் என்பவர் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தார். […]
