பெங்களூருவில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரை தாக்கினால் அவர்களது பெயர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்படும் என்று இணை போலீஸ் கமிஷனர் ரவி காந்தே கவுடா எச்சரித்துள்ளார். பெங்களூர் போலீஸ் கமிஷனர் ரவிகாந்த் கவுடா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, “பெங்களூருவில் கொரோனா காரணமாக குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை சோதனை செய்வதற்கு நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சமீபகாலமாக குடிபோதையில் வாகனங்களை ஓட்டி பெரிய அளவில் விபத்துகள் மற்றும் உயிர்பலி ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க முடிவுசெய்து […]
