அப்பாவுடன் சென்ற மகன் ரயில் மேல் ஏறி செல்பி எடுத்த போது உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து கிராமத்தில் வசிப்பவர் மகேஷ்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஜானேஸ்வரன் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய அப்பாவுடன் இன்று காலை ரயில் நிலையம் அருகே உள்ள அப்பா வேலை பார்க்கும் குடோனுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மகேஷ்குமார் தன்னுடைய வேலைகளை […]
