மழை காரணமாக பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஹில்குரோவ்-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தண்டவாளத்தில் பாறை ஒன்று உருண்டு விழுந்து விட்டது. மேலும் மண்சரிவால் மரமும் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்து விட்டது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 111 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு மலை ரயில் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து […]
