சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே முன்பதிவு வசதியுடன் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களுடன், முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரயிலும் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதm நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்திய பொது முடக்கம், தடுப்பூசி, போன்ற நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து பல்வேறு வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து படிப்படியாக மீண்டும் […]
