திண்டுக்கல்லில் ரயில்வே பயணிகளுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் நாடகம் நடத்தி காட்டியுள்ளனர். வெளிமாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ரயில்வே காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையில் திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த […]
