Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு!…. நாடு முழுதும் மின்சார வாகனங்களுக்காக…. ரயில்வே நிர்வாகத்தின்‌ சூப்பர் பிளான்…..!!!!

இந்தியாவில் அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வே ஆகும். இந்தியாவில் ரயில் சேவையில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு விதமான வசதிகளையும் சலுகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்வே நிர்வாகம் புதிதாக ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. மொத்தம் 46 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 6 மாதத்தில் ரயில் டிக்கெட் வருவாய் இவ்வளவு கோடியா?…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் ஓய்ந்ததையடுத்து நாட்டில் மக்கள் நடமாட்ட சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களுக்கு அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன் இருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரயில்வே போக்குவரத்து விமான போக்குவரத்து போன்றவை வருவாய் மற்றும் பயணிகள் எண்ணிக்கை மூலம் எடுத்துக்காட்டி உள்ளது. இந்திய ரயில்வேக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் இந்த மாதம் 8ஆம் தேதி வரை கிடைத்த வருவாய் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த காலகட்டத்தில் மொத்தம் ரூ.33,476 […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில்வே நிர்வாகம் ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளதால், மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு நடைபாதை கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இந்த கட்டணத்தை குறைப்பதற்கு ரயில்வே சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ரயில்வே நிர்வாகம் அதிரடியாக மற்றொரு முடிவையும் எடுத்துள்ளது. அதாவது அதிக தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 10 […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா”?….. இது தெரியாம பண்ணாதீங்க…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் இதையெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். டிக்கெட் புக்கிங் செய்வதற்கான ரயில் பெட்டி குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். சொந்த ஊருக்கு செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வெகுதூரம் வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலானோர் ரயில்களை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணம் பாதுகாப்பானது என்பது மட்டுமல்லாமல் டிக்கெட் கட்டணமும் குறைவு, மிக வேகமாகவும் செல்லும். இதனால் நிறைய பேர் பேருந்து, விமான பயணிகளை விட ரயில்வே பயணங்களை அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

“இனி டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை”….. முன்பதிவில்லா ரயில் டிக்கெட்….. இந்த ஒரு ஆப் போதும்….!!!!

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை எடுக்க பயணிகள் என்ற (uts ticket booking) செயலியை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. செல்போன் மூலம் பணபரிமாற்றம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகள் விரைவாகவும் எளிதாகவும் நடைபெறுகிறது. முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனாலும் செல் போன் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்துவது இல்லை. இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்டநேரம் பயணச்சீட்டு பதிவு மையங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து?….. இதுதான் காரணமாம்….. ரயில்வே நிர்வாகம் அதிரடி….!!!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும் நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காகவும், இந்த முடிவை எடுத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் அதிகப்படியான மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக மத்திய அரசு நிலக்கரி தட்டுப்பாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் இரவு நேரத்தில் பயணம் செய்யும் பயணிகளின் கவனத்திற்கு….வெளியான புதிய மாற்றங்கள்…!!!

இந்தியாவில் பொது போக்குவரத்தில் சாதாரண மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது ரயில் போக்குவரத்து தான். இந்நிலையில் இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களின் இருப்பிடம், அலுவலகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்ற சூழலில் கொரோனா கால கட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரயில்வே நிர்வாகம்  அமல்படுத்தியது. அந்த வகையில் முதலில் முன்பதிவில்லா சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டு, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. இனி கவலையில்லை வந்தாச்சு புது ரூல்ஸ்…. ரயில் பயணிகள் ஹேப்பி…!!!!

ரயில்  பயணிகளுக்காக புதிய நடைமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இரவு நேரங்களில் ரயிலில் பயணம் செய்யும்போது சில தொந்தரவுகளை பயணிகள்  சந்தித்திருப்பார்கள். இரவில் பயணம் செய்பவர்கள் சக பயணிகளால் அடிக்கடி தூங்க முடியாமல் அவதிப்படுவதாக ரயில்வே வாரியத்துக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது. தற்போது அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி சகபயணிகள் மொபைலில் சத்தமாக பேசவும், பாடல் வைத்து கேட்கவும் அனுமதி கிடையாது. அவ்வாறு தொந்தரவு செய்பவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இதை மட்டும் யாரும் செய்யாதீங்க…. 3 ஆண்டு சிறை நிச்சயம்….!!!!

ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், பயணிகள் யாரும் ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது.அதனை மீறி பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் ரயில்வே சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மின்சார ரயில்களில் கூட்ட நெருக்கடியால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக எடுத்துச் செல்வதை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விடும் ரயில்வே நிர்வாகம்…. என்ன காரணம்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…!!!

ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விட்டு சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே துறைக்கு சொந்தமான ரயில் பெட்டிகளை தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்வதற்கும், குத்தகை விடுவதற்கும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள தரப்பினரின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விடப்படும். காலியான பெட்டிகளையும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடியும். குத்தகைக்கு எடுக்கப்படும் ரயில் பெட்டிகளில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தது 5 ஆண்டு காலத்துக்கு ரயில் பெட்டிகளை குத்தகைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு இதுவரை 407 மெட்ரிக்டன் ஆக்ஸிஜன்… இந்தியன் ரயில்வே விநியோகம்…!!

தமிழகத்திற்கு இதுவரை 407 மெட்ரிக்டன் ஆக்சிஜனை இந்தியன் ரயில்வே நிர்வாகம் வினியோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் தட்டுப்பாடும் சில மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஸ்டேஷன் போகும்போது…. மறக்காம எடுத்துட்டு போங்க…. இல்லனா ரூ.500 அபராதம்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்… ரயில்கள் தொடர்ந்து இயங்கும்…!!

இந்தியாவில் அனைத்து விதமான ரயில்கள் இயங்கும் என்றும், மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரயில்வே வாரிய தலைவர் சுனித் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு, மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை பயன்படுத்தி  பலரும் ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி வீடியோ! பயணிகளுக்கு குடிநீர்…. பாத்ரூமிலிருந்து வருகிறது…. கண்டிப்பா இதை பாருங்க…!!

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த குடிநீர் எங்கிருந்து வருகிறது? என்பது நமக்கு தெரியாது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவானது தான் என்று நினைத்து நாமும்  அதை குடித்து வருகிறோம். ஆனால் இந்த தண்ணீர் பயணிகளுக்கு சுகாதாரமானதாக இருக்குமா? இருக்காதா? என்று சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம் கரோத் ரயில் நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

திடீர் ரயில் கட்டண உயர்வு…. காரணம் இது தான்…. விளக்கம் அளித்த ரயில்வே…!!

நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது இடங்கள், ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் மெல்ல மெல்ல திரும்பத் தொடங்கினர். இதையடுத்து ரயில் போக்குவரத்து தொடங்கியது. ஆனாலும் கொரோனா இன்னும் குறையவில்லை. ஒரு சில இடங்களில் கொரோனா இரண்டாவது அலை, புது வகைக் கொரோனா ஆகியவை பரவி […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது..? ரயில்வே நிர்வாகம் விளக்கம்..!!

இனி இரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது என்ற தகவல் குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் ரயில்களில் முன்பதிவு செய்பவர்களுக்கு காத்திருப்பு பட்டியலில் வைக்கும் முறையை ரயில்வே நிர்வாகம் நீக்க உள்ளதாக தொடர்ந்து செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக தற்போது ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது ரயில் இருக்கைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது காத்திருப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த முறை நீக்கப்படாது. தற்போது தேவைக்கேற்ற ரயில்களின் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 8 முதல்… ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான அறிவிப்பு..!!

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இடங்களில் இருந்து மன்னார்குடி, பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு மேலும் 8 ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து செங்கோட்டை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து ….!!

நாடு முழுவதும் ரயில் சேவை அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றது என ரயில்வே அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில் சேவை ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களின் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையும் ரத்து என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜூலை 1 […]

Categories

Tech |