இரயில்வே தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்னையிலிருந்து குருவாயூருக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தண்டவாளத்தில் கடந்த 19-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் பாறாங்கற்களை வைத்துள்ளனர். அவ்வழியே ரயில் சென்றபோது பாறாங்கற்கள் மீது பலமாக மோதியது. ஆனால் நல்ல வேளையாக ரயில் தடம் புரளாமல் பாதுகாப்பாக சென்றது. இதுகுறித்து ரயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு கதிர்வேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். […]
